வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது
வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடல் இன்று வியாழக்கிழமை பொரளை பொது மயானத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
கடந்த 18 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஐவரடங்கிய விசேட சட்ட வைத்திய நிபுணர் குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் உடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டது.
மரணத்திற்கான காரணத்தை சரிபார்க்க ஷாஃப்டரின் சடலத்தை தோண்டி எடுக்க வேண்டியது அவசியம் என கடந்த விசாரணையின்போது கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரியவிடம் நிபுணர் குழு தெரிவித்திருந்தது.
விசேட நிபுணர் குழுவின் கோரிக்கைக்கு அமைய வர்த்தகரின் உடலத்தை தோண்டி எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
52 வயதான தினேஸ் ஷாஃப்டர் கடந்த 2022 டிசம்பர் 15 ஆம் திகதி பொரளை மயானத்தில் தனது மகிழுந்தின் சாரதி ஆசனத்தில் கை கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுஇ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறுநாள் உயிரிழந்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவு பொரளை பொலிஸாருடன் இணைந்து ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தது.
இந்த மரணம் தொடர்பில் ஷாஃப்டரின் குடும்பத்தின் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம் குறித்த மரணத்துக்கான காரணத்தை கண்டறிவதற்கான குறித்த விசேட நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.