யாழ். இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது தாக்குதல்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – மருதடி வீதியில் உள்ள யாழ். இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்று புதன்கிழமை இரவு இனம் தெரியாத நபர்களினால் போத்தல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று வியாழக்கிழமை காலை யாழ். இந்திய துணை தூதுவரினால் யாழ்ப்பாண பொலிஸாருக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.