
யானை துரத்துவது போல கனவு கண்டால்
இதில் இரண்டு பலன்கள் சொல்லப்பட்டுள்ளது.அதாவது யானை கோபத்துடன் உங்களை துரத்துவது போல கனவு வந்தால் கஷ்டங்கள்,சோகங்கள், கவலைகள் அல்லது நோய்கள் ஏற்படக்கூடும் என்றும்,அதே வேளையில் யானை மகிழ்ச்சியுடன் விளையாட்டாக உங்களை துரத்துவது போல கனவு கண்டால் நல்ல விசயங்கள்,சுபநிகழ்ச்சிகள் நடக்கூடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது .
யானை உங்களுக்கு மாலை இடுவது போல கனவு வந்தால் எதோ நல்ல காரியம் நடக்க போகிறது என்பதை குறிப்பதாகும். ஒருவேளை உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்,திருமணம் நடக்கலாம்,பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.
நீங்கள் யானைக்கு எதாவது உணவு கொடுப்பது போல கனவு கண்டால் உங்களை சுற்றி இருப்பவரிடத்தில் நல்ல இணக்கமான சூழ்நிலை அதாவது பிரச்சனை இல்லாமல் சுமூகமாக செல்வீர்கள் என்பதை குறிப்பதாகும்.
உங்கள் கனவில் வரும் யானை இறந்து விடுவதை போல கண்டால் நீங்கள் இருக்கும் பகுதியில் தலைவர் யாருக்காவது மரணம் நிகழலாம். அல்லது முக்கிய பொறுப்பில் இருக்கும் நபர் இறந்து விடலாம்.
உங்கள் கனவில் யானைக் கூட்டம் மகிழ்ச்சியாக இருப்பது போல அல்லது குட்டிகளுடன் சேர்ந்து விளையாடி மகிழ்வது போல கனவு வந்தால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.பணம் கிடைக்க கூடிய புதிய தொழில்களை தொடங்கி வருமானம் பெருகக்கூடும்.
உங்கள் கனவில் வரும் யானைக்கு நீங்கள் தான் உரிமையாளர் போல இருந்தால் உங்கள் அந்தஸ்து உயரப் போகிறது.உங்களின் புகழ் கூடப்போகிறது என்பதாகும்.
இதில் காட்சிகளை பொறுத்து பலன்கள் மாறும்.அதாவது நல்ல சந்தோஷமாக யானை மீது அமர்ந்து செல்வது போல கனவு கண்டால் பதவி உயர்வு,சொந்த வீடு போன்றவைகள் கிடைக்கலாம்.
அதுவே கோபத்துடன் அல்லது சோகத்துடன் செல்வது போல கனவு கண்டால் புதிய பிரச்சனைகள்,சிக்கல்கள்,நஷ்டங்கள்,கவலைகள்,கணவன் மனைவி பிரிவு போன்றவைகள் ஏற்படக்கூடும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்