மூன்றாவது முறையாகவும் பெண் குழந்தையை பிரசவித்த மனைவியை உயிருடன் எரித்த கணவன்!

மூன்றாவது முறையாகவும் பெண் குழந்தையைப் பிரசவித்தமைக்காக கணவர் ஒருவர் தனது மனைவியை உயிருடன் தீவைத்து எரித்துள்ளார்

இச் சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

திருமணமான இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை இல்லாமையினால் கணவன் மனைவியை தொடர்ந்து சித்திரவதைக்கு உட்படுத்தி வந்துள்ளார்

இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான மனைவிக்கு 3ஆவது முறையாகவும் பெண் குழந்தையே பிறந்துள்ளது.

இதனால் கணவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மனைவியை உயிருடன் தீ வைத்து எரித்துள்ளார்.

தீக்காயங்களுக்கு உள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்