முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிவிப்பு
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்கின்ற தமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அமைச்சுப்பதவிகளை ஏற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவார்கள், என அவர் தெரிவித்துள்ளார்.