மீன்பிடி பூனை இறந்த நிலையில் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக் கல்லாற்றில் பிரியோனைலூரஸ் விவேரினஸ் (Prionailurus viverrinus) என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததென நம்பப்படும் அரிய வகைப் புலியின் உடலம் இன்று வெள்ளிக்கிழமை இறந்த நிலையில் மீட்கப்பட்டள்ளது.
கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் மீட்கப்பட்டுள்ள 3 அடி நீளமான மீன்பிடிப் பூனையின் உடலம் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதா அல்லது யாராவது தாக்கி கொல்லப்பட்டதா என்ற விசாரணைகளை வன வனஜீவராசி திணைக்களமும் பொலிஸாரும் ஆரம்பித்துள்ளனர்.
காட்டுப் பூனை என அழைக்கப்படும் இப்புலியை சுற்றி மல்லிகைப் பூக்கள் தூவப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்