மீனவப் பெண்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை- மொறவெவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பன்மதவாச்சி கிராமத்தில் 06 மீனவப் பெண்களுக்கான மீன்பிடி உபகரனங்கள் AHRC மற்றும் PCCJ நிறுவனத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில் நிலைபேறான வாழ்வாதார உதவிகளை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களுக்காக AHRC நிறுவனமானது வழங்;கி ஊக்குவித்து வருகின்றது.

இச் செயற்திட்டத்தின் ஊடாக மொறவெவ பிரதேச செயலகப்பிரிவின் கீழ் உள்ள பன்மதவாச்சி கிராமத்தில் நன்நீர் மீன்பிடித் தொழிலினை மேற்கொண்டுவரும் 06 மீனவப் பெண்களுக்கு ரூபா பத்து இலட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மொறவெவ – பன்மதவாச்சி கிராமத்தின் பொதுக்கட்டடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மொறவெவ பிரதேச செயலாளர் திருமதி.ஸ்ரீபதி மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர், AHRC நிறுவனதின் இணைப்பாளர் க.லவகுசரா, பிரதி இணைப்பாளர் அ.மதன், PCCJ நிறுவனத்தின் இணைப்பாளர் த.கிருஷாந்தன் மற்றும் திட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் இக்கிராமத்தில் காணப்படுகின்ற காணி உட்பட ஏனைய பிரச்சினைகள் தொடர்பான மகஜரும் பிரதேச மக்களால் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்