
மாணவர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கும் செயற்திட்டம்
-கல்முனை நிருபர் –
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கும் ஆரம்ப செயற்திட்டம் வித்தியாலய அதிபர் க.செல்வராஜா தலைமையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களின் போசாக்கினை மேம்படுத்தும் வகையில் இவ் இலைக்கஞ்சி வழங்கி வைக்கப்படுகின்றது.
களுவாஞ்சிக்குடி சூரியா அரிசி ஆலை அனுசரனையில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்களிப்பில் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இன்று கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு முதற்கட்டமாக இலைக்கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
இக் கஞ்சியின் உள்ளீடுகளாக வல்லாரை, முருங்கை இலை, பொன்னாங்கன்னி, கீரை, தூதுவளை, முல்லை போன்ற ஆரோக்கியமான இலைகள் போடப்பட்டு சுவையான கஞ்சி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.