மனோ கணேசன்- ஜூலி சங் இடையே சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் இடம் பெற்றது.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நகர்வு, அதிகாரப் பகிர்வு, மலையகப் பெருந்தோட்ட காணி உரிமை, சட்டத்தின் ஆட்சி, பொருளாதார சவால்கள், சர்வதேச நாணய நிதியம் ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல் இடம் பெற்றதாக மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.