
மட்டக்களப்பு மாநகரசபை : இலங்கை தமிழ் அரசுக் கட்சியால் ஆட்சி அமைக்கவுள்ளது
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல் இரண்டு வருட முதல்வராக சிவம் பாக்கியநாதனும் , அடுத்த இரண்டு வருடங்களுக்கு முதல்வராக துரைசிங்கம் மதன்குமாரும் பதவி வகிக்கவுள்ளனர். இதேபோன்று பிரதி முதல்வராக வைரமுத்து டினேஷ்குமாரும் , பிரதி முதல்வராக ரகுநாதனும் பதவி வகிக்கவுள்ளனர்.
மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத்தின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவு செய்யப்பட்ட 16 உறுப்பினர்கள் மத்தியில் இது தொடர்பான இணக்கம் காணப்பட்டுள்ளதாக கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் , தெரிவு செய்யப்பட்ட கட்சி உறுப்பினர்கள் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இதனிடையே ஐக்கிய மக்கள் சக்தியினர் தமிழ் அரசுக் கட்சியினருக்கு நிபந்தனை அற்ற முறையில் ஆதரவை வழங்க முன்வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேலும் சுயட்சையாக போட்டியிட்டவர்கள் நிபந்தனை அற்ற முறையில் இணைந்து கொள்ளலாம் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்