மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடம் யாருக்கு?
ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் நேற்று வியாழக்கிழமை பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்.
பிரித்தானிய மகாராணியின் உயிரிழப்பிற்கு அந்த நாட்டின் செய்திதாள்கள் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றன.
மகாராணிக்கு மரியாதை செலுத்தும் வகையில், த டைம்ஸ், டெய்லி மெய்ல், த டெய்லி டெலிகிராப் போன்ற செய்தித்தாள்கள் மகாராணியின் மரணம் குறித்து தமது இரங்கலை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், மகாராணி மூத்த மகனான இளவரசர் சார்ல்ஸ் மன்னராக நியமிக்கப்பட்டுள்ளார். சார்ல்ஸின் துணைவியான கமிலா மகாராணியாக முடிசூடவுள்ளார்.
மேலும், மகாராணியின் கொஹினூர் வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் கமிலாவுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த கிரீடத்தில் பொருத்தப்பட்டுள்ள 2ஆயிரத்து 800 வைர கற்கள் ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவில் எடுத்துச் செல்லப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது.