நேற்று அமைக்கப்பட்ட இணைய கோபுரம் இன்று அகற்றப்பட்டது

காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை தற்காலிகமாக அமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு கோபுரம் திடீரென இன்று சனிக்கிழமை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டத்திற்கு வருகை தருவோரின் தகவல்களை திரட்டுவதற்காக இந்த கோபுரம் அமைக்கப்பட்டதாக தொலைத்தொடர்பு துறை சார் புத்திஜீவிகள் தனக்கு தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், கோபுரம் இன்று அப்புறப்படுத்தப்பட்டுள்ளது

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24