நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு : பெண் ஒருவர் உட்பட இருவர் காயம்
நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று புதன்கிழமை பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நீதிமன்ற வழக்கு ஒன்றில் ஆஜராகியிருந்த நபரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெண் வீதியில் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.