தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

ஏகல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை ஆனால் தொழிற்சாலையின் உடைமைகள் சேதம் அடைந்துள்ளன.

எவ்வாறாயினும், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்