தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பி நாயகர் புரம், மல்வத்தையை சேர்ந்த குலசேகரன் ரவி (வயது – 62) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்