துவிச்சக்கரவண்டிகளுக்கு இரவு வேளைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத்திட்டம்
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக துவிச்சக்கரவண்டிகளுக்கு இரவு வேளைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத்திட்டம் செங்கலடி பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி IP. சரச் சந்திர, ஏறாவூர் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி J.S.A.ஜயலத் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர் .
பாதையால் பயணித்த துவிச்சக்கரவண்டிகளுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் இதன்போது ஒட்டப்பட்டன.