திங்கட்கிழமை அதிபர்- ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர், ஆசிரியர்களின் போக்குவரத்து பிரச்சினைக்கு சரியான தீர்மானத்தை மேற்கொண்டு தீர்வை வழங்கக்கோரி அனைத்து அதிபர்கள், ஆசிரியர்களும் மற்றும் ஆசிரி யர் ஆலோசகர் அனைவரும் எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டிருப்பதுடன் எரிபொருள் தட்டுப்பாடு மற் றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மாணவர்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்லுவதற்கு மிகவும் கஷ்டப்படும் நிலையும் காணப்படுகின்றது.

இப்பிரச்சினைக்கு தீர்வாக மாணவர்களை அவர்களின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாடசாலைக்கு இணைத்துக் கொள்வதோடு, ஆசிரியர்களையும் அவர்களின் வீட்டுக்கு அருகாமையில் அமைந்துள்ள பாடசாலைக்கு தற்காலிக இணைப்பு வழங்குமாறும் அல்லது வேறு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.