கோட்டாவின் ஆதரவாளர்களால் சிலாபத்தில் பதற்றம்

ஜனாதிபதி கோட்டாவை பதவிவிலக கோரி நாடளாவிய ரீதியில் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அவருக்கு ஆதரவாக ஒரு சிலர் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்களை நடத்தகின்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக சிலாபம் நகர பகுதிக்கு வந்த குழுவொன்றை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரிய மற்றுமொரு குழுவினர் விரட்டியடித்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.