குளத்தின் பின் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு
-யாழ் நிருபர்-
முல்லைத்தீவு ஐயங்கன் குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியை அண்மித்துள்ள பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான அக்கராயன் குளத்தின் பின் பகுதியிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதி முல்லைத்தீவு ஐயங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்டது.
குறித்த சடலம் யாருடையது என அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக ஐயங்கன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்