குரங்கு அம்மை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அவசரநிலை பிரகடனம்

குரங்குஅம்மை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அமெரிக்காவில் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கலிபோர்னியா, நியூயோர்க் மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய மாநிலங்களில் இக் காய்ச்சல் வைரஸ் அதிகளவில் பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரை அமெரிக்காவில் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்ட 7101 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மேலும், உலகம் முழுவதும் 26,864 பேர் குரங்கம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.