குச்சவெளியில் ஆர்ப்பாட்டம்
-மூதூர் நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் 50 வருடங்கள் பழமை வாய்ந்த நெல் களஞ்சியசாலை மற்றும் அதன் காணிகளையும் தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி மக்கள் இன்று புதன் கிழமை காலை சுலோகங்களை ஏந்தி கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யுத்த மோதல்களின் போது, பழைய சந்தை பிரதேசத்தில் பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அந்த இடத்திலிருந்து பொலிஸார் அகற்றப்பட்ட பின்னர், முழுக் காணியும் தொல்பொருள் பிரதேசம் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இதனை தமக்கு ஒப்படைக்குமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வீதி மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக நுழைவாயிலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குச்சவெளி உதவிப் பிரதேச செயலாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு ஒன்றையும் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.