கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் சடலமாக மீட்பு

கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் பீட்டர் ஹப்பு ஆராச்சி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வண்ணாத்தவில்லுவ பிரதேசத்தில் உள்ள தனது காணிக்கு தேங்காய் பறிப்பதற்காக இன்று சனிக்கிழமை காலை இவர்சென்றுள்ள நிலையில் தென்னந்தோப்புக் காவல் வீட்டில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வண்ணாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.