![](https://minnal24.com/wp-content/uploads/2021/05/Hospital-death-Shutterstock-680x350-1.jpg)
எரிபொருள் வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழப்பு
அத்துருகிரிய பிரதேசத்தில் எரிபொருள் வரிசையில் பல மணிநேரம் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த 85 வயதான குறித்த நபர் திடீரென மயக்கமடைந்து வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், அவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மரணத்திற்கான காரணம் மாரடைப்பு எனவும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.