கால்நடை மருத்துவர்கள் நாளை அடையாள வேலைநிறுத்தம்

கால்நடை மருத்துவர்கள் நாளை அடையாள வேலைநிறுத்தம்

கால்நடை மருத்துவர்கள் சங்கம் நாளை (ஜூன் 9) காலை 6.00 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவர்களுக்கான தனி சேவையொன்றை ஆரம்பிக்ககும் அரசாங்கத்தின் முயற்சியைத் தடுக்கும் வகையில் நடைபெறும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளதாக சங்கத்தின் தலைவர் டாக்டர் உப்புல் ரஞ்சித் குமார கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அறிவித்தார்.

இதன் விளைவாக அனைத்து அரசு கால்நடை அலுவலகங்களின் செயல்பாடுகளும் பாதிக்கப்படும். அத்துடன், தேசிய விலங்கியல் பூங்காக்கள், வனவிலங்கு பாதுகாப்புத் துறை, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் உள்ள விலங்குகளுக்கான தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் உள்ளூர் அரசாங்க நிறுவனங்களில் கால்நடை மருத்துவர்களால் வழங்கப்படும் சேவைகளும் பாதிக்கப்படும் என்று டாக்டர் குமார மேலும் கூறினார்.