வடக்கு கிழக்கில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதி வேண்டி மன்னாரில் பேரணி
வடக்கு கிழக்கில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதி வேண்டி மன்னார் அடம்பன் சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடம் நோக்கி இன்று வியாழக்கிழமை(24) காலை அமைதி பேரணி முன்னெடுக்கப்பட்டது.
மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த அமைதி பேரணி இடம்பெற்றது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் சந்தியில் இன்று வியாழக்கிழமை(24) காலை 10 மணியளவில் குறித்த அமைதி பேரணி ஆரம்பமானது.
திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை பேரணி சென்றடைந்தது.
குறித்த பதாதைகளில் ‘எங்கே எங்கள் உறவுகள் எங்கே?,இலங்கை அசரே இது நாடா அல்லது இடு காடா?,வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்,மனிதனும் புதை குழிக்குள் நீதியும் புதை குழிக்குள்ளா?,சர்வதேசமே மௌனத்தை கலை’ உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் அடம்பனியில் இருந்து திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழி நோக்கி ஊர்வலமாக வருகை தந்தனர்.