வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது .
நாளை கிழக்கு மாகாணத்திலும், பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் உள்ள சில பகுதிகளில் வெப்பச் சுட்டி கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மட்டத்தில் நிலவக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையைக் குறிக்கும் வெப்பச் சுட்டெண் (Heat Index), கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும், பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் “Caution Level” எனப்படும் எச்சரிக்கை அளவிற்கு உயர வாய்ப்புள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெப்பம் தொடர்பான நோய்களைத் தவிர்க்கப் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நீர்ச்சத்துடன் இருத்தல், லேசான ஆடைகளை அணிதல் மற்றும் நண்பகல் நேரங்களில் நீண்ட நேரம் வெளியில் இருப்பதைத் தவிர்த்தல் போன்றவற்றை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, போதுமான அளவு நீர் அருந்துமாறும், நிழலான இடங்களில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
