மின்னல் எச்சரிக்கை – பொதுமக்கள் அவதானம்

தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், களுத்துறை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன், , 08 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 17 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வுளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, மேற்படி மாவட்டங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது, அதே நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.