படகு விபத்துக்குள்ளானதில் 60 பேர் மாயம்

லிபியாவின் கடற்பகுதியில், ஏதிலிகள் படகொன்று விபத்துக்குள்ளானதில் 60க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஏதிலிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய தரைக்கடலை கடந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் நோக்கில் 86 பயணிகளுடன் குறித்த படகு பயணித்துள்ள நிலையில், இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.