உயர்வடைந்த கொழும்பு பங்குச் சந்தை

 

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று  புதன்கிழமை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

இதன்படி, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 77.54 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 0.33% அதிகரிப்பைப் பதிவு செய்து, இன்று 23,659.70 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

மேலும் கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 7.2 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது.