இம்ரான் எம்.பி சுகாதார அமைச்சரிடம் விடுத்துள்ள கோரிக்கை!

-கிண்ணியா நிருபர்-

கிண்ணியா வைத்தியசாலைக்கு குழந்தைநல வைத்தியர் ஒருவரை நியமிப்பது சம்பந்தமாக நாடபளுமன்ற உறுப்பினர் இம்ரான் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்

அண்மையில் வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்கள் பகிர்ந்தளிப்பின் போது கிண்ணியா தள வைத்தியசாலைக்கு நியமிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த குழந்தை நல வைத்தியர் திடீரென வேறொரு வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டமை சம்பந்தமாகவும், பல வருடங்களாக கிண்ணியா வைத்தியசாலைக்கு குழந்தைநல வைத்தியர் ஒருவர் நியமிக்கப்படாதுள்ளமை சம்பந்தமாகவும் இதன் காரணமாக இப்பிரதேசத்திலுள்ள நோயாளிகளும், பெற்றோர்களும் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் சம்பந்தமாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவை நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சந்தித்து விளக்கிக் கூறியதுடன், குழந்தை நல வைத்தியர் ஒருவரை நியமித்துத் தரும்படி கடிதம் ஊடாக வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் அவர்கள், இவ்விடயம் சம்பந்தமாக ஆராய்ந்து பார்ப்பதாகவும், கிண்ணியா வைத்தியசாலைக்கு குழந்தைநல வைத்தியர் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.