
800 ருபாவுக்கு பெண் குழந்தையை விற்ற தாய்
இந்தியாவில் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ஜா மாவட்டத்தில் தாய் தனது குழந்தையை குடும்ப வறுமை காரணமாக 800 ருபாவிற்கு விற்றுள்ளார்.
மயூர்பஞ்ஜா மாவட்டத்தில் கராமி முர்மு முசு என்னும் தம்பதிகளில் முசு தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் நிலையில், கராமி முர்மு ஒடிசாவில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் முர்முவுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. வறுமை காரணமாக அந்த குழந்தையை வளர்க்க முடியாது என்று நினைத்த அவர், குழந்தையை விற்றுள்ளார்.
இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த கணவர் இரண்டாவது குழந்தை குறித்து முர்முவிடம் கேட்டுள்ளார். அதற்கு குழந்தை உயிரிழந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சந்தேகமடைந்த கணவர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.பொலிஸார் நடத்திய விசாரணையில் குழந்தை இல்லாத தம்பதிக்கு 800 ரூபாய்க்கு குழந்தை விற்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக குழந்தையின் தாய் கராமி முர்மு, குழந்தையை வாங்கிய தம்பதி மற்றும் அதற்கு ஏற்பாடு செய்த இடைத்தரகர் ஆகிய 4 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்