50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்றையதினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை, புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க