5 சிறுமிகளுக்கு பாதிரியாரால் நேர்ந்த கொடுமை

கொழும்பில் தங்குமிடமொன்றில் ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாதிரியாரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிருலப்பனை பிரதேசத்தில் மத சபை ஒன்றினை நடாத்தி வரும் 63 வயதான பாதிரியாரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விடுதி பதிவு செய்யப்படாதது என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் இங்கு 9 முதல் 17 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகள் சந்தேகத்திற்குரிய பாதிரியாரால் 2020 முதல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

5 சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப பொலிஸ் ஏற்பாடு செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்த விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.