3 பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் : ஒருவர் பலி

நபரொருவர் தனது மனைவி உட்பட மூன்று பெண்களை கூரிய ஆயதத்தால் தாக்கிவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிவேரிய பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான குறித்த சந்தேகநபரின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வேபட வடக்கு பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

மேலும், தாக்குதலுக்கு உள்ளான ஏனைய இரு பெண்களும் படுகாயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் பொலிஸ் பாதுகாப்பில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை வெலிவேரிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.