
19 வது திருத்தத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்
அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை இரத்துச்செய்துவிட்டு 19 வது திருத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவார்கள் என தெரிவித்துள்ள அவர் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமையால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்புகளை தீர்ப்பதற்கான முயற்சிகளுக்கும் அவர்கள் ஆதரவளிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு பாராளுமன்ற பொறிமுறை மூலம் தீர்வை காண்பதற்கான முயற்சிகளை சபாநாயகர் முன்னெடுக்கவேண்டும் என்ற வேண்டுகோளிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவளித்துள்ளார்.