19 வது திருத்தத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்

அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை இரத்துச்செய்துவிட்டு 19 வது திருத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு பாராளுமன்ற பொறிமுறை மூலம் தீர்வை காண்பதற்கான முயற்சிகளை சபாநாயகர் முன்னெடுக்கவேண்டும் என்ற வேண்டுகோளிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவளித்துள்ளார்.
Minnal24 வானொலி