13 சிறுவர்களுடன் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து

களுத்துறை – அளுத்கம, பின்ஹேன குருகந்த பகுதியில் 13 சிறுவர்களுடன் பயணித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானது.

பின்ஹேன குருகந்த பகுதியை சேர்ந்த சிறுவர் இல்லத்திற்கு சொந்தமான முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர்களை அதி வேகமாக பாடசாலைக்கு அழைத்து சென்ற சந்தர்ப்பத்தில் விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 13 சிறுவர்களும், முச்சக்கரவண்டியின் சாரதியும் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பலத்த காயமடைந்த 6 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்