வௌிநாட்டு பெண்ணிடம் இலஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது

மாத்தறை – மிதிகம பொலிஸ் நிலையத்தின் 2 கான்ஸ்டபிள்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வௌிநாட்டு பெண்ணொருவரிடம் இருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான கான்ஸ்டபிள்கள் கடந்த 31ஆம் திகதி வௌிநாட்டு பெண்ணொருவரிடம் இருந்து 5இ000 ரூபா இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM