
வெடி விபத்து: இரண்டு பேர் பலி
இந்தியாவில் சிவகாசியை அடுத்த காளையார் குறிச்சியில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் 4 பேர்இ ஒரே அறையில் ரசாயன கலவை தயாரித்துகொண்டிருந்தபோது, கை தவறி கலவை கீழே விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதாகக் கூறப்படுகிறது. இதில், அறை தரைமட்டமாகி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 2 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும் விபத்து நடந்த ஆலையில் ஆய்வு செய்த ஆட்சியர் பிரியா, ரசாயன மூலப்பொருட்களை முறையாக கையாளாததே விபத்திற்கு காரணம் என்று தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்