வீதியை விட்டு விலகி வயலில் பாய்ந்து விபத்துக்குள்ளாகிய வாகனம்!

-மூதூர் நிருபர்-

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியின், மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில், பாதையைவிட்டு விலகி வேன் விபத்துக்குள்ளானதில், வாகனத்தில் பயணித்த மூவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சேருவில பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி குறித்த வேன் பயணித்த போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து சிறிய மரம் ஒன்றுடன் மோதி, வயலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகனத்தில் பயணித்தவர்கள் பேருவளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Minnal24 FM