வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டி விபத்து

கேகாலை – மாவனெல்லை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீட்டுக் கூரையின் மீது பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

அரநாயக்க-மாவனெல்ல வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி சாண்ட்மன்னா வளைவில் திரும்பும் போது வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீட்டின் கூரையின் மீது பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.