
வீட்டிற்கு சென்று வாக்கு கோரியவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைது
இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில், இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என, லக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதிதாக உருவாகியுள்ள அரசியல் கட்சியொன்றின் சார்பில் லக்கல பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 19 வயதுடைய யுவதியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக , பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முடிவடைய சில மணி நேரங்கள் இருக்கையில், வீடு வீடாகச் சென்று வாக்கு கோரும் நிகழ்வின் போது இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.