விவசாயிகளுக்கு இலவச பசளை வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்ட நிலாவெளி கமநல சேவை பகுதிக்குட்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எம்.ஓ.பி பசளை விநியோக நடவடிக்கை இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

குறித்த உர விநியோகம் நிலாவெளி கமநல சேவை நிலையத்தில் வைத்து பதில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ரமேஷ் தலைமையில் இடம்பெற்றது.

3417 ஏக்கர் பெரும்போக நெற்பயிர்ச்செய்கைக்காக குறித்த உரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சிறுநீர் பாசனம், பெரிய நீர்ப்பாசனத்திற்கு ஒரு ஏக்கருக்கு 12 கிலோவும் மானாவரிக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோவும் வழங்கி வைக்கப்பட்டன.

12 கமக்கார அமைப்புக்களை சேர்ந்த விவசாயிகளுக்கு குறித்த இலவச பசளை வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்