
வாழைச்சேனை கிண்ணையடி பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு கிண்ணையடி பிரதேசத்தில் மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களால் ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணையடி பிரதேசத்தில் கடந்த 2021 ம் ஆண்டு மீன் வளர்ப்பு எனும் போர்வையில், பாரிய குழிகள் தோண்டி மணல் அகழ்வு இடம்பெற்றது, இதனை கண்டித்து கிராமத்து இளைஞர்களினால் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்று இத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த முதலாம் திகதி சிலர் தங்களிடம் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரம் உண்டு என தெரிவித்து, கனரக வாகனங்களை கொண்டு வந்து மண் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, இன்று மணல் அகழ்வு இடம்பெறுவதாக அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து, அதனை தடுக்க முயன்ற இருவரை பொலிஸ் நிலையம் அழைத்து சென்றுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது
இவ் மணல் அகழ்வு தொடர்பாக அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் பிரதேச செயலாளர் நில அளவை சுரங்க பணியகம்( GSMB) மாற்றும் மாவட்ட நன்னீர் மீன் வளப்பு அலவலகம், மத்திய சுற்றாடல் அதிகார சபை போன்ற திணைக்களங்களுடன் விசேட கலந்துரையாடல் இடம் பெற்று, அடுத்து வரும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் வரை இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இவ்வாறு மண் அகழ முற்பட்ட வேளையில் அங்கு கூடிய மக்கள் அவ்விடத்தில் அமர்ந்தவாறு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்