வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்களுக்கான அறிவித்தல்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அஞ்சல் மூலம் இதுவரை கிடைக்கவில்லை என்றால், தமக்கு கடிதங்கள் கிடைக்கப்பெறும் தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதி செய்வதன் மூலம் அதைப் பெறலாம் என்று தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் மே 6 ஆம் திகதி மாலை 4  மணி வரை இந்த வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்