வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் வாளுடன் இளைஞர்கள் கைது

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வா நகர் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் இரண்டு இளைஞர்கள் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு வாள்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்