வருடாந்த மகரயோதி மண்டலத்தின் கறுப்பண்ணசாமி பூஜை நிகழ்வு

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகரயோதி மண்டலத்தின் கறுப்பண்ணசாமி பூஜை நேற்றையதினம் வியாழக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

விநாயக வழிபாட்டு கிரியைகள் ஆரம்பமாகி, கருவறையில் வீற்றிருக்கும் ஐயப்பனுக்கு விஷேட, அபிஷேகம் இடம்பெற்றது. பின்னர் 18 படி பூஜைகள் இடம்பெற்று வசந்த மண்டபத்தில் அருள்பாலிக்கும் ஐயப்பனுக்கும் தீபாராதனைகள் இடம்பெற்றது.

108 ஐயப்பன் தோத்திர மாந்திரங்கள் குரு சாமிமார்கள், சிவாச்சாரியரினால் ஓதப்பட்டு ஐயப்பனின், கறுப்பண்ணசாமி வீதியுலா வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இவ் திருவிழாவினை ஆலய பிரதம குரு ஹரிகரசுதக் குருசாமி நடாத்திவைத்திருந்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்