வயல்வெளியில் நீண்டகாலமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை, தம்பிநாயகபுரம் பகுதியில் உள்ள கோவிலுக்கு பின்னால் காணப்படும் வயல் வெளியில் பல காலமாக சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் நேற்று புதன்கிழமை அதிகாலை 02.15 மணியளவில் சம்மாந்துறை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது.

சம்மாந்துறை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிடப்பட்டது.

இதேவேளை, கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 8,750 மில்லிலீற்றர் கசிப்பு, 30,000 மில்லிலீற்றர் கோடா, கேஸ் சிலிண்டர் 1, கேஸ் அடுப்பு 1, 20 லீற்றர் கொள்கலன் 2, டங்கர் 1, இரும்பு பரள் 1 ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

சுமார் ஒரு லட்சத்திற்கு அதிக பெறுமதியான கசிப்பு உற்பத்தி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேக நபர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கைது நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில், பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான, சார்ஜன் அசோக்க, சார்ஜன் அனுர, பொலிஸ் உத்தியோகத்தர்களான திசாநாயக்க, மதுசான் ஆகிய குழுவினரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்