வடக்கில் மீண்டும் எலிக்காய்ச்சலுக்கான அச்சுறுத்தல்!

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நாளில் மீண்டும், எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் யாழ்.போதனா வைத்தியசாலையிலும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியில் எலிக்காய்ச்சலை ஒழிப்பதற்கு சுகாதார அதிகாரிகள் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்த போதிலும், எலிக்காய்ச்சல் தொற்றின் அதிகரிப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இதேவேளை, வடக்கு பிராந்தியத்தில் உள்ள வைத்தியசாலைகளில் எலிக்காய்ச்சலால் இதுவரை ஒன்பது நோயாளிகள் உயிரிழந்துள்ளதுடன், 234 பேர் இந்நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்