லொத்தர் டிக்கட் விற்கும் 50 வயது நபர் 9 வயது சிறுமிக்கு செய்த செயல்!

-சம்மாந்துறை நிருபர்-

அம்பாறை – வீரமுனை பிரதேசத்தில் 9 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அப்பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து லொத்தர் டிக்கெட் விற்பனை செய்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரமுனை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

9 வயதுடைய தனது மகளை குறித்த நபர் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை சிறுமியின் தாயார் பதிவு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய லொத்தர் டிக்கெட் வியாபாரியான அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Minnal24 FM