ரஷ்யா உக்ரைன் அமைதி குழுவுக்கு விஷம் வைக்கப்பட்டதா?

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில், இரு நாட்டு பிரதிநிதிகள் குழு இடையே அமைதி பேச்சு நடந்து வருகிறது.

பல்வேறு சுற்றுப்பேச்சில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.

உக்ரைன் அரசின் வேண்டுகோளை ஏற்று, ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிக் இந்த அமைதிப் பேச்சில் பங்கேற்று உக்ரைனுக்கு ஆதரவாக பேசி வந்தார்.

இந்நிலையில், தொழிலதிபர் ரோமன் மற்றும் உக்ரைன் அமைதி குழுவை சேர்ந்த இரண்டு பிரதிநிதிகளுக்கு கடந்த மாதம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அமெரிக்காவின், ‘வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், மூவருக்கும் கண்கள் சிவந்து, முகம் மற்றும் கைகளில் தோல் பகுதி உரிய தொடங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவில் நடந்த பேச்சின் போது இவர்களுக்கு விஷம் வைக்கப்பட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

தற்போது அவர்கள் உடல்நிலை தேறி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Minnal24 FM